Lyricist Palani Bharathi

விடை கொடு விடை கொடு விழியே பாடல் வரிகள்

ஓஹோ ஓஓ ஹோ ஓஹோ ஹோ
ஓஓ ஓஹோ ஓஓ ஹோ ஓஹோ ஹோ ஓஓ

விடை கொடு விடை கொடு விழியே கண்ணீரின் பயணம் இது
வழி விடு வழி விடு உயிரே உடல் மட்டும் போகிறது

உயிர் சுனை ஊற்றிலே நெருப்பினை ஊற்றினாய்
பௌர்ணமி கோப்பையில் இருள் குடித்தாய்

ஓஹோ ஓஓ ஹோ… ஓஹோ ஹோ ஓஓ…
ஆஹா ஆஆ ஆஆ ஆஆ…

உள்ளங்கையில் நானே உயிரை ஊற்றி பார்த்தேன்
போவதாய் வருகிறாய் நூறு முறை தானே

இன்றே விடை கொடு என்றுனை கேட்கின்ற வார்த்தையை
மௌனத்தில் இடருகின்றாய்

உள்ளே நடை பெரும் நாடகம் திரை விழும் வேளையில்
மேடையில் தோன்றுகிறாய்

தனி தனி காயமாய் ரணப்பட தோணுதே
விடைகளே கேள்வியாய் ஆகிறதே

ஓஹோ ஓஓ ஹோ ஓஹோ ஹோ ஓஓ
விடை கொடு விடை கொடு விழியே கண்ணீரின் பயணம் இது
ஹ்ம்ம் ஆஹா ஆஆ ஹா

நிலவு பேச்சை கேட்டேன் மொழியாய் பிரிந்து கோத்தேன்
வாழ்த்தினேன் மறைகிறேன் ஞாபகத்தை கோர்த்தேன்

உந்தன் காதலை நட்பில் மூடிய இதயத்தை
ஒரு முறை வெளியில் எடு

உந்தன் சாலைகள் நெடுங்கில் பூவிடும்
மரங்களை வளர்த்திட உரிமை கொடு

நீர் குமிழ் மீதிலே கடல் சுமை ஏற்றினாய்
எதிர் திசை தூரமே அழைக்கிறதே

ஓஹோ ஓஓ ஹோ ஓஹோ ஹோ ஓஓ
விடை கொடு விடை கொடு விழியே கண்ணீரின் பயணம் இது
வழி விடு வழி விடு உயிரே உடல் மட்டும் போகிறது

உயிர் சுனை ஊற்றிலே நெருப்பினை ஊற்றினாய்
பௌர்ணமி கோப்பையில் இருள் குடித்தாய்
ஓஹோ ஓஓ ஹோ ஓஹோ ஹோ
ஓஓ ஓஹோ ஓஓ ஹோ ஓஹோ ஹோ ஓஓ…

Movie: Piriyadha Varam Vendum
Lyrics: Pazhani Bharathi
Music: S. A. Rajkumar

Leave a Reply