Lyricist Vairamuthu

சோலைக்குயில் பாடல் வரிகள்

தானே தானா ராரரி நானா ம்
சோலைக்குயில் பாடும் சொல்லி கொடுத்தது யாரு
சோலைகுயில் பாடும் ஹிஹீம்ம் அப்படியில்லையே

தான்னனன நானா நான்ன னன நானா
சோலைக்குயில் பாடும் சொல்லி கொடுத்தது யாரு
ம்ம் அப்படித்தான்

சோலைக்குயில் பாடும் சொல்லி கொடுத்தது யாரு
பூமி என்னும் கிண்ணம் இசையில் நிறைந்து வழியுதம்மா
இதயம் துடிப்பதே இசை லயத்தில் அல்லவா
அதை உள்ளே கேளு நீயும் பாடு

சோலைக்குயில் பாடும் சொல்லி கொடுத்தது யாரு
பூமி என்னும் கிண்ணம் இசையில் நிறைந்து வழியுதம்மா
இதயம் துடிப்பதே இசை லயத்தில் அல்லவா
அதை உள்ளே கேளு நீயும் பாடு சோலைக்குயில் பாடும்..

ஆஅ ஆஅ ஆஆ ஆஅ ஆஅ ஆஆ
ஆஅ ஆஅ ஆஆ ஆஅ ஆஅ ஆஆ

கொட்டும் மழை முடிந்த பிறகும் கொடிகளில் இலையில் இருந்து
சொட்டுகின்ற மழையின் துளிகள்
தாளகதி செல்லுமே அதை கண்டு தெளி மனமே

குடங்களை குளத்தில் நிறைத்து குமரிகள் நடக்கும் பொழுது
குடத்துக்குள் தளும்பும் அலைகள் சப்தஸ்வரம் சொல்லுமே…

நமக்கெல்லாம் சங்கீதமும் மொழிகளும் வேறொன்றோ
பறைவைக்கும் விலங்குக்கும் சங்கீதமே மொழியன்றோ

பெண்ணின் கையேடு வளையொலி சங்கீதம்
பெண்ணின் காலோடு கொலுசொலி சங்கீதம்

அந்த வளையும் கொலுசும் ஸ்வரங்கள்
உனக்கு சொல்லி தரவில்லையா சோலைக்குயில் பாடும்

துள்ளி வரும் குழந்தை எடுத்து அள்ளி வைத்து அணைக்கும்போது
பிஞ்சு பிள்ளை நெஞ்சை நனைப்பது சின்ன சுகம் அல்லவா
அது நெஞ்சிக்கழகல்லவா

இதயங்கள் எரியும் பொழுது இதயத்தை புரிந்த ஒருத்தி
இரு விழி விரல் நனைப்பது சின்ன சுகமல்லவா

சுற்றமெல்லாம் போன பின்னும் தனிமைதான் சின்ன சுகம்
வெண்ணிலவு போன பின்னும் வெட்டவெளி சின்ன சுகம்

இந்த சங்கீதம் காயத்துக்கு சின்ன சுகம்
பிள்ளை சந்தோசம் சோகத்திலும் சின்ன சுகம்

ஒரு ஆனந்த பூங்காற்றை அள்ளி தருவது
இசை இசை அல்லவா

சோலைக்குயில் பாடும் சொல்லி கொடுத்தது யாரு
பூமி என்னும் கிண்ணம் இசையில் நிறைந்து வழியுதம்மா
இதயம் துடிப்பதே இசை லயத்தில் அல்லவா
அதை உள்ளே கேளு நீயும் பாடு

சோலைக்குயில் பாடும் சொல்லி கொடுத்தது யாரு
பூமி என்னும் கிண்ணம் இசையில் நிறைந்து வழியுதம்மா

இதயம் துடிப்பதே இசை லயத்தில் அல்லவா
அதை உள்ளே கேளு நீயும் பாடு
சோலைக்குயில் பாடும் ம்ம்ம்…

Movie: Anantha Poongatre
Lyrics: Vairamuthu
Music:  Deva

Leave a Reply