Lyricist Na. Muthukumar

பளபளக்குற பகலா நீ பாடல் வரிகள்

பளபளக்குற பகலா நீ படபடக்குற அகலா நீ
அனல் அடிக்கிற துகளா நீ நகலின் நகலா நீ

மழையடிக்கிற முகிலா நீ திணறடிக்கிற திகிலா நீ
மணமணக்குற அகிலா நீ முள்ளா மலரா நீ

சூடாக இல்லாவிட்டால் இரத்தத்தில் வேகம் இல்லை
சேட்டைகள் இல்லாவிட்டால் இனிமை இல்லை

கூட்டை தான் தாண்டாவிட்டால் வண்ணத்துப்பூச்சி இல்லை
வீட்டை நீ தாண்டாவிட்டால் வானமே இல்லை

வானவில்லை போலே இளமையடா தினம் புதுமையடா 
அதை அனுபவிடா காலங்காலமாக பெருசுங்கடா 
ரொம்ப பழசுங்கடா நீ முன்னே முன்னே வாடா வாடா

பளபளக்குற பகலா நீ படபடக்குற அகலா நீ
அனல் அடிக்கிற துகளா நீ நகலின் நகலா நீ

மழையடிக்கிற முகிலா நீ திணறடிக்கிற திகிலா நீ
மணமணக்குற அகிலா நீ முள்ளா மலரா நீ

எட்டித்தொடும் வயது இது ஒரு வெட்டுக்கத்தி போலிருக்கும்
அதிசயம் என்னவென்றால் அதன் இருபக்கம் கூா் இருக்கும்
கனவுக்கு செயல் கொடுத்தால் அந்த சூாியனில் செடி முளைக்கும்

புலன்களை அடக்கி வைத்தால் தினம் புதுப்புது சுகம் கிடைக்கும்
காலில் குத்தும் ஆணி உன் ஏணி என்று காமி பல இன்பம்
அள்ளிசோ்த்து ஒரு மூட்டைகட்டி வாநீ வாநீ

பளபளக்குற பகலா நீ ஹாஹா படபடக்குற அகலா
நீ ஹாஹாஅனல் அடிக்கிற துகளா நீ நகலின் நகலா நீ ஹே

மழையடிக்கிற முகிலா நீ ஹாஹா திணறடிக்கிற திகிலா
நீ ஹாஹா மணமணக்குற அகிலா நீ முள்ளா மலரா நீ

இதுவரை நெஞ்சிலிருக்கும் சில துன்பங்களை நாம் மறப்போம்
கடிகார முள் தொலைத்து தொடுவானம்வரை போய் வருவோம்

அடைமழை வாசல் வந்தால் கையில் குடையின்றி வா நனைவோம்
அடையாளம் தான் துறப்போம் எல்லா தேசத்திலும் போய் வசிப்போம்

என்ன கொண்டு வந்தோம் நாம் என்ன கொண்டு போவோம்
அட இந்த நொடி போதும் வா வேற என்ன வேண்டும் வேண்டும்

பளபளக்குற பகலா நீ படபடக்குற அகலா நீ
அனல் அடிக்கிற துகளா நீ நகலின் நகலா நீ

மழையடிக்கிற முகிலா நீ திணறடிக்கிற திகிலா நீ
மணமணக்குற அகிலா நீ முள்ளா மலரா நீ

சூடாக இல்லாவிட்டால் இரத்தத்தில் வேகம் இல்லை
சேட்டைகள் இல்லாவிட்டால் இனிமை இல்லை

கூட்டை தான் தாண்டாவிட்டால் வண்ணத்துப்பூச்சி இல்லை
வீட்டை நீ தாண்டாவிட்டால் வானமே இல்லை

வானவில்லை போலே இளமையடா தினம் புதுமையடா அதை அனுபவிடா
அதை அனுபவிடா காலங்காலமாக பெருசுங்கடா 
ரொம்ப பழசுங்கடா நீ முன்னே முன்னே வாடா வாடா…

Movie: Ayan
Lyrics: Na. Muthukumar
Music: Harris Jayaraj

Leave a Reply