மழைக்காற்று பாடல் வரிகள்
ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஹா ஆஆ ஆஆ
மழைக்காற்று வந்து தமிழ் பேசுதே
மலைச்சாரல் வந்து இசை பாடுதே
மலரோடு வண்டு உரையாடுதே என்னோடு நீயும் பேசடி
மழைக்காற்று வந்து தமிழ் பேசினால்
மலைச்சாரல் வந்து இசை பாடினால்
மலரோடு வண்டு உரையாடினால்
உன்னோடு நானும் பேசுவேன்
புல்லோடு இரவில் பனி தூங்குமே சொல்லோடு
கவியின் பொருள் தூங்குமே
கல்லோடு மறைந்து சிலை தூங்குமே தூங்காது
நமது தீபமே தூங்காது நமது தீபமே
கடல் கொண்ட நீளம் கரைந்தாலுமே
உடல் கொண்ட ஜீவன் ஓய்ந்தாலுமே முடியாது
அண்டம் முடிந்தாலுமே முடியாது நமது பந்தமே
முடியாது நமது பந்தமே
மழைக்காற்று வந்து தமிழ் பேசுமா
மலைச்சாரல் வந்து இசை பாடுமா
மலரோடு வண்டு உரையாடுதே
என்னோடு நீயும் பேசடி
இடையோடு ரெண்டு கரம் சேர்க்கிறேன்
என்னென்ன வென்று சரி பார்க்கிறேன்
இதழ் தேனை மெல்ல ருசி பார்க்கிறேன்
இடைவேளை இல்லை தொடருவேன்
இடைவேளை இல்லை தொடருவேன்
கண்ணாளன் தீண்ட மடி சாய்கிறேன்
கண்ணோரம் காதல் பசி பார்க்கிறேன்
என் கூந்தல் பூக்கள் பரிமாறினேன்
இனி என்ன செய்வது அறியேன் இனி என்ன ஹ்ம்ம்
மழைக்காற்று வந்து தமிழ் பேசுதே
மலைச்சாரல் வந்து இசை பாடுதே
மலரோடு வண்டு உரையாடுதே என்னோடு நீயும் பேசடி
ஆஆஆஆ ஆஹா ஆஹா ஆஆஆ…
Movie: Vedham
Lyrics: Vairamuthu
Music: Vidyasagar