Lyricist Vairamuthu

மழைக்காற்று பாடல் வரிகள்

ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஹா ஆஆ ஆஆ
மழைக்காற்று வந்து தமிழ் பேசுதே 
மலைச்சாரல் வந்து இசை பாடுதே 
மலரோடு வண்டு உரையாடுதே என்னோடு நீயும் பேசடி

மழைக்காற்று வந்து தமிழ் பேசினால் 
மலைச்சாரல் வந்து இசை பாடினால் 
மலரோடு வண்டு உரையாடினால்
உன்னோடு நானும் பேசுவேன்

புல்லோடு இரவில் பனி தூங்குமே சொல்லோடு 
கவியின் பொருள் தூங்குமே 
கல்லோடு மறைந்து சிலை தூங்குமே தூங்காது
நமது தீபமே தூங்காது நமது தீபமே

கடல் கொண்ட நீளம் கரைந்தாலுமே
உடல் கொண்ட ஜீவன் ஓய்ந்தாலுமே முடியாது
அண்டம் முடிந்தாலுமே முடியாது நமது பந்தமே
முடியாது நமது பந்தமே

மழைக்காற்று வந்து தமிழ் பேசுமா
மலைச்சாரல் வந்து இசை பாடுமா
மலரோடு வண்டு உரையாடுதே
என்னோடு நீயும் பேசடி

இடையோடு ரெண்டு கரம் சேர்க்கிறேன்
என்னென்ன வென்று சரி பார்க்கிறேன் 
இதழ் தேனை மெல்ல ருசி பார்க்கிறேன்
இடைவேளை இல்லை தொடருவேன் 
இடைவேளை இல்லை தொடருவேன்

கண்ணாளன் தீண்ட மடி சாய்கிறேன்
கண்ணோரம் காதல் பசி பார்க்கிறேன் 
என் கூந்தல் பூக்கள் பரிமாறினேன் 
இனி என்ன செய்வது அறியேன் இனி என்ன ஹ்ம்ம்

மழைக்காற்று வந்து தமிழ் பேசுதே
மலைச்சாரல் வந்து இசை பாடுதே 
மலரோடு வண்டு உரையாடுதே என்னோடு நீயும் பேசடி
ஆஆஆஆ ஆஹா ஆஹா ஆஆஆ…

Movie: Vedham
Lyrics: Vairamuthu
Music: Vidyasagar

 

Leave a Reply