Apple Penne Neeyaaro Song Lyrics in Tamil
ஆப்பிள் பெண்ணே நீ யாரோ நீ யாரோ நீ யாரோ
ஐஸ்கிரீம் சிலையே நீ யாரோ நீ யாரோ நீ யாரோ
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ
ஆப்பிள் பெண்ணே நீ யாரோ ஐஸ்கிரீம் சிலையே நீ யாரோ
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ
பூவின் மகளே நீ யாரோ புன்னகை நிலவே நீ யாரோ
பாதிக் கனவில் மறையும் பறவை யாரோ
என்னை நீ பார்க்க வில்லை என் உயிர் நொந்ததடி
பெண்ணே நீ போன வழியில் என் உயிர் போனதடி
எங்கோ ஓர் சாலை வளைவில் என் பிம்பம் தொலைந்ததடி
அங்கேயே நின்று கொண்டு என் உயிர் தேம்புதடி
மின்னலை கண்டு கண்கள் மூடி கண்களை திறந்தேன் காணவில்லை
மின்னல் ஒளியை கையில் கொள்ள ஐயோ ஐயோ வசதியில்லை
என்னை நோக்கி சிந்திய மழைத்துளி எங்கே விழுந்தது தெரியவில்லை
எந்த சிப்பியில் முத்தாய் போச்சோ இதுவரை ஏதும் தகவலில்லை
அழகே உன்னை காணாமல் அன்னம் தண்ணீர் தொட மாட்டேன்
ஆகாயத்தின் மறு பக்கம் சென்றால் கூட விடமாட்டேன்
உன்னை காணும் முன்னே கடவுள் வந்தாலும் கடவுளை தொழ மாட்டேன்
எங்கோ ஓர் சாலை வளைவில் என் பிம்பம் தொலைந்ததடி
அங்கேயே நின்று கொண்டு என் உயிர் தேம்புதடி
ஆப்பிள் பெண்ணே நீ யாரோ ஐஸ்கிரீம் சிலையே நீ யாரோ
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ...
பெண்ணே உன்னை மறுமுறை பார்த்தால் லவ் யூ லவ் யூ சொல்வாயா
பாவம் ஐயோ பைத்தியம் என்று பார்வையினாலே கொல்வாயா
உலகின் விளிம்பில் நீ இருந்தாலும் அங்கும் வருவேன் அறிவாயா
உயிரை திருகி கையில் தந்தால் ஓகே என்று சொல்வாயா
ஆமாம் என்று சொல்லிவிட்டால் ஆண்டுகள் நூறு உயிர்த்திருப்பேன்
இல்லை என்று சொல்லிவிட்டால் சொல்லின் முடிவில் உயிர் துறப்பேன்
நான் இன்னொரு கருவில் பிறந்து வந்தேனும் மீண்டும் காதலிப்பேன்
எங்கோ ஓர் சாலை வளைவில் என் பிம்பம் தொலைந்ததடி
அங்கேயே நின்று கொண்டு என் உயிர் தேம்புதடி
ஆப்பிள் பெண்ணே நீ யாரோ ஐஸ்கிரீம் சிலையே நீ யாரோ
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ...
பூவின் மகளே நீ யாரோ புன்னகை நிலவே நீ யாரோ
பாதிக் கனவில் மறையும் பறவை யாரோ...
Movie: Roja Kootam
Lyrics: Pazhani Bharathi
Music: Bharadwaj
0 Comments