Lyricist Kabilan

மழை நின்ற பின்பும் தூறல் போல பாடல் வரிகள்

ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹா ஹா ஹா
மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல்

எனக்கும் காதல் பிறந்திருக்கே 
அதற்கு உன் பேர் வைக்கட்டுமா ஹோய்
எனக்குள் இதயம் தனித்திருக்கே அதை உன்னுடன் சேர்க்கட்டுமா

மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல்

நீர் துளிகள் நிலம் விழுந்தால் பூக்கள் மெல்ல தலை அசைக்கும்
என் மனதில் நீ நுழைந்தால் மௌனம் கூட இசை அமைக்கும்

பூங்குயில்கள் மறைந்திருந்தால் கூவும் ஓசை மறைவதில்லை
தாமரையாய் நான் இருந்தும் தாகம் இன்னும் அடங்கவில்லை

வானும் இணைந்து நடக்கும் இந்த பயணத்தில் என்ன நடக்கும்
வானம் இருக்கும் வரைக்கும் இந்த வானவில் உன்னுடன் இருக்கும்
மழை துளி பனி துளி கலைந்த பின்னே
அது மறுபடி இரண்டென பிரிந்திடுமா

மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல்

கண்ணிமைகள் கை தட்டியே உன்னை மெல்ல அழைக்கிறதே
உன் செவியில் விழவில்லையா உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே

உன்னருகே நான் இருந்தும் உண்மை சொல்ல துணிவு இல்லை
கைகளிலே விரல் இருந்தும் கைகள் கோர்க்க முடியவில்லை

உன்னை எனக்கு பிடிக்கும் அதை சொல்வதில் தானே தயக்கம்
நீயே சொல்லும் வரைக்கும் என் காதலும் காத்து கிடக்கும்

தினம் தினம் கனவினில் வந்து விடு
நம் திருமண அழைப்பிதழ் தந்து விடு

மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல்

எனக்கும் காதல் பிறந்திருக்கே 
அதற்கு உன் பேர் வைக்கட்டுமா ஹோய்
எனக்குள் இதயம் தனித்திருக்கே அதை உன்னுடன் சேர்க்கட்டுமா…

Movie: Raman Thediya Seethai
Lyrics: Kabilan 
Music: Vidyasagar 

 

Leave a Reply