Lyricist Pa.Vijay

அழகே பிரம்மனிடம் மனு குடுக்க பாடல் வரிகள்

அழகே பிரம்மனிடம் மனு குடுக்க போயிருந்தேன்
நீ என் மனைவியாக வேண்டும் என்று

ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான்
ஆயுள்வரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லி வந்தேன்

என் ஆசை நிறைவேறுமா என் தோழி நீயும் சொல்லம்மா
நடக்கும் நடக்கும் நான் கூட சொல்கிறேன்

அழகே பிரம்மனிடம் மனு குடுக்க போயிருந்தேன்
நீ என் மனைவியாக வேண்டும் என்று

உன்னை நான் சுமப்பதினால் இதயமும் கருவரைதான்
மனதால் நானும் அன்னையே மறவேன் என்றும் உன்னையே

நான் பாலைவனத்தில் விதைபோல் நீ பருவம் தந்த மழைபோல்
என் காதல் செடியில் பூவும் பூத்ததே

உன் விழி திறந்திருந்தால் விடியலே தேவையில்லை
உன்னை நான் துறந்திருந்தால் இறகு சொந்தம் இல்லை

இத்தனையும் இனி கிடைக்குமா கிடைக்கும் 
கிடைக்கும் நான் கூட சொல்கிறேன்
அழகே பிரம்மனிடம் மனு குடுக்க போயிருந்தேன்
நீ என் மனைவியாக வேண்டும் என்று

ஏன் இந்த பிறவி என்று இதுவரை நினைத்திருந்தேன்
உயிரே உன்னை பார்த்ததும் உலகே புதியதானதே

என்னை படைத்த அந்த தெய்வம் என்னை சுமந்த அன்னை தெய்வம்
இவை இரண்டும் உந்தன் கண்ணில் பார்க்கிறேன்

பருவங்கள் ஓடி போகும் உருவங்கள் மாறி போகும்
உன் மீது கொண்ட காதல் உயிரையும் தாண்டி வாழும்

சொன்னதெல்லாம் இனி நடக்குமா 
நடக்கும் நடக்கும் நான் கூட சொல்கிறேன்
அழகே பிரம்மனிடம் மனு குடுக்க போயிருந்தேன்
நீ என் மனைவியாக வேண்டும் என்று

ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான்
ஆயுள்வரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லி வந்தேன்

என் ஆசை நிறைவேறுமா என் தோழி நீயும் சொல்லம்மா
நடக்கும் நடக்கும் நான் கூட சொல்கிறேன்…

Movie: Devathaiyai Kanden
Lyrics: Pa. Vijay
Music: Deva

Leave a Reply