Lyricist Na. Muthukumar

ஆருயிரே ஆருயிரே பாடல் வரிகள்

ஆருயிரே ஆருயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
நீயில்லையே நான் இல்லையே
நீ போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்

உயிரே என் உயிரே எனக்குள் உன் உயிரே
கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன் என் உயிர் பிரிகிறேன் 
ஆருயிரே ஆருயிரே அன்பே உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்

நீயில்லையே நான் இல்லையே
நீ போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்

விழிதாண்டி போனாலும் வருவேன் உன்னிடம்
எங்கே நீ தொலைந்தாலும் நெஞ்சில் உன் முகம்
காற்றென மார்வேனோ   ஓ … ஓ … உன் சுவாசத்தில் சேர்வேனோ
நீ சுவாசிக்கும் போதும் வெளிவரமாட்டேன்

உனக்குள் வசிப்பேனே உயிரே என் உயிரே உனக்குள் என் உயிரே
உன்னை எண்ணி அழுகிறேன் கரைகிறேன் என் உயிர் பிரிகிறேன் 
ஆருயிரே அன்பே உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்

கொன்றாலும் அழியாத உந்தன் ஞாபகம்
கண்ணீரில் முடிந்தால் தான் காதல் காவியம்

மேற்றினில் வாழ்வேனோ உன் தோள்களில் சாய்வேனோ
உன் கைவிரல் பிடித்து காதலில் திளைத்து காலங்கள் மறப்பேனோ

உன்னிலே என்னுயிரே நாமே ஓருயிரே
நம்மை எண்ணி அழுகிறேன் கரைகிறேன் உயிரை துறக்கிறேனே…

Movie: Madrasapattinam
Lyrics: Na. Muthukumar
Music: G. V. Prakash Kumar

 

Leave a Reply