Lyricist Na. Muthukumar

கிறு கிறு பாடல் வரிகள்

கிறு கிறு கிறு வென கெறங்குறேன்
நான் நொறு நொறு நொறு என நொறுங்குறேன்
கெறங்குற நொறுங்குற

திரு திரு திரு வென முழிக்கிறேன் 
நான் தரையில நூல இழுக்குறேன்
முழிக்கிற இழுக்கற

திக்கி தடவி தவிக்கிறேன் நான் தீ
கோழியா துடிக்கிறேன் தவிக்கிற துடிக்கிற

விக்கி விக்கி வழுகிறேன் நான் வில்ல போல வளையுறேன்
வழுக்கற வளையற

குறுக்கும் நெடுக்கும் பாத்து பாத்து கிறுக்கு புடிச்சு
அலையுறேன் குலுக்கி போட்ட
சோழிய போல கண்ணு அடிச்சு சொருகுறேன்
அலையுற சொருகுற

முறுக்கி வச்ச தாம்பு கயிற மடங்கி மடங்கி மருகுறேன்
மந்திரிச்ச ஆட்ட போல எந்திரிச்சு மொணங்குறேன்
மருகுற மொணங்குற

ஈரவானம் மேல ஏறும் எலி போல நொலையுறேன் 
திரை போட்டு தங்க சிலைய திருடத்தானே திரியுறேன்
நொழையுற திரியுற

கொட்ட கொட்ட கண் முழிச்சு ஆந்த போல
ஏங்குறேன் கிட்ட தட்ட
வௌவாலாக தலை கீழாக தொங்குறேன்
ஏங்குற தொங்குற

குட்டி போட்ட பூன போல கூச்சம் விட்டு சிணுங்குறேன் 
பூட்டு போட்ட பொட்டிய போல
பத்திரமாக பதுங்குறேன் சிணுங்குற பதுங்குற

நீ சிரிக்கும் நேரம் பாத்து பசியினு கெஞ்சுறேன்
நீயும் கொஞ்சம் சம்மதிச்சா
பாத்திரத்த முழுங்குறேன் கெஞ்சுற முழுங்குற

கிறு கிறு கிறு வென கெறங்குறேன்
நான் நொறு நொறு நொறு என நொறுங்குறேன்

திரு திரு திரு வென முழிக்கிறேன்
நான் தரையில நூல இழுக்குறேன்

திக்கி தடவி தவிக்கிறேன் நான் தீ கோழியா துடிக்கிறேன்
விக்கி விக்கி வழுகிறேன் 
நான் வில்ல போல வளையுறேன்…

Movie: Kaadhal
Lyrics:Na. Muthu Kumar
Music: Joshua Sridhar

Leave a Reply