Lyricist Vairamuthu

மானூத்து மந்தையில பாடல் வரிகள்

மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே

தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி
அவன் தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி

சீரு சொமந்த சாதி சனமே ஆறு கடந்தா ஊரு வருமே
சீரு சொமந்த சாதி சனமே ஆறு கடந்தா ஊரு வருமே

மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே

தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி
அவன் தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி
சீரு சொமந்த சாதி சனமே ஆறு கடந்தா ஊரு வருமே

நாட்டுக் கோழி அடிச்சு நாக்கு சொட்ட சமைச்சு
நல்லெண்ண ஊத்திக் குடு ஆத்தா

மேலு காலு வலிச்சா வெள்ளப்பூண்டு உரிச்சி
வெல்லங் கொஞ்சம் போட்டுக் குடு ஆத்தா

பச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க
பிள்ளைக்கி தாய்ப்பாலத் தூக்கிக் கொடுக்கச்சொல்லு
மச்சான திண்ணையில போத்திப் படுக்கச்சொல்லு

மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே

தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி
அவன் தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி
சீரு சொமந்த சாதி சனமே ஆறு கடந்தா ஊரு வருமே
சீரு சொமந்த சாதி சனமே ஆறு கடந்தா ஊரு வருமே

ஆட்டுப்பால் குடிச்சா அறிவழிஞ்சி போகுமுன்னு
எருமப்பால் குடிச்சா ஏப்பம் வந்து சேருமுன்னு
காராம்பசு ஓட்டி வாராண்டி தாய் மாமன்

வெள்ளிச்சங்கு செஞ்சா வெலக்கி வெக்க வேணுமுன்னு
தங்கத்தில் சங்கு செஞ்சி தாராண்டி தாய் மாமன்

பச்ச ஒடம்புக்காரி பாத்து நடக்கச்சொல்லுங்க
ஈ எறும்பு அண்டாம எட்டி இருக்கச்சொல்லு
மச்சான ஈரத்துணி கட்டி இருக்கச்சொல்லு..ஹா..ஹா..

மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே..ஐயோ
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே

தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி
அவன் தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி

சீரு சொமந்த சாதி சனமே ஆறு கடந்தா ஊரு வருமே
ஹோய் சீரு சொமந்த சாதி சனமே ஆறு கடந்தா ஊரு வருமே

மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே…போடு
பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே…

Movie: Kizhakku Cheemayile
Lyrics: Vairamuthu
Music: A. R. Rahman

Leave a Reply