Lyricist Vairamuthu

ஈஸ்வரா வானும் மண்ணும் பாடல் வரிகள்

ஈஸ்வரா வானும் மண்ணும் 
ஹென்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா
ஈஸ்வரா வானும் மண்ணும் 
ஹென்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா
நீரும் நெருப்பும் ஃபிரண்ட்ஷிப் ஆனது உன்னால் ஈஸ்வரா

மயிலையிலே கபாலீஸ்வரா கயிலையிலே பரமேஸ்வரா
மயிலையிலே கபாலீஸ்வரா கயிலையிலே பரமேஸ்வரா

புதிய மேகங்கள் மழையாய் பொழிந்தன ஈஸ்வரா
முள்ளின் நுனிகளும் மலர்களாய் பூத்தன ஈஸ்வரா
ஜாலிதான் சகோதரா சண்டை இனி லேதுரா

ஈஸ்வரா… வானும் மண்ணும் ஹென்ஷேக் பண்ணுது உன்னால்
ஈஸ்வரா… நீரும் நெருப்பும் ஃபிரண்ட்ஷிப் ஆனது உன்னால் ஈஸ்வரா

கிளியின் சிறகு கடன் கேட்கலாம்.. தப்பில்லே
க்ளிண்டன் வீட்டில் பெண் கேட்கலாம்.. தப்பில்லே

நீல வானத்தை துவைக்கலாம்.. தப்பில்லே
நிலவை பூமிக்குள் இழுக்கலாம்.. தப்பில்லே

கோட்டை தேவையில்லை ஆனாலும் கூட்டணி வைத்திருப்போம்
செண்ட்ரல் கவிழ்ந்தாலும் அப்போதும் சினேகம் வளர்த்திருப்போம்
ஜாலிதான் சகோதரா சண்டை இனி லேதுரா

ஈஸ்வரா… வானும் மண்ணும் ஹென்ஷேக் பண்ணுது உன்னால்
ஈஸ்வரா… நீரும் நெருப்பும் ஃபிரண்ட்ஷிப் ஆனது உன்னால் ஈஸ்வரா

காதல் சங்கம் ஒன்று அமைக்கலாம்.. தப்பில்லே
காமன் ரதியை மெம்பர் ஆக்கலாம்.. தப்பில்லே

பிரியமான பெண்ணை ரசிக்கலாம்.. தப்பில்லே
புத்தகம் பாடம் கொஞ்சம் மூடலாம்.. தப்பில்லே

மாடர்ன் உலகத்திலே எல்லாமே மாறிப் போகட்டுமே
நட்பின் கற்பு மட்டும் என்னாலும் மாறாதிருக்கட்டுமே
ஜாலிதான் சகோதரா சண்டை இனி லேதுரா

ஈஸ்வரா.. வானும் மண்ணும் 
ஹென்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா
ஈஸ்வரா.. வானும் மண்ணும் 
ஹென்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா
மானும் புலியும்தேநீர் பருகுது உன்னால் ஈஸ்வரா

மயிலையிலே கபாலீஸ்வரா கயிலையிலே பரமேஸ்வரா
மயிலையிலே கபாலீஸ்வரா கயிலையிலே பரமேஸ்வரா

புதிய மேகங்கள் மழையாய் பொழிந்தன ஈஸ்வரா
முள்ளின் நுனிகளும் மலர்களாய் பூத்தன ஈஸ்வரா
ஜாலிதான் சகோதரா சண்டை இனி லேதுரா…

Movie: Kannedhirey Thondrinal
Lyrics: Vairamuthu
Music: Deva

 

Leave a Reply