Lyricist Na. Muthukumar

வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு பாடல் வரிகள்

வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு கொல்ல பாக்குதே
அது வாள் எடுத்து வாள் எடுத்து வெட்ட பாக்குதே

வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு கொல்ல பாக்குதே
அது வாள் எடுத்து வாள் எடுத்து வெட்ட பாக்குதே

நான் திமிரா செஞ்ச காரியம் ஒன்னு தப்பா போனதே 
என் தாமிரபரணி தண்ணி இப்போ உப்பா போனதே

நீ எனக்கு சொந்தமில்லை என்று  சொன்ன 
உடன் மனசு வெந்து போச்சே 
என் நிழலில் கூட இப்போ ரத்தம் கொட்டுதடி
இதயம் சுருங்கி போச்சே

வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு கொல்ல பாக்குதே
அது வாள் எடுத்து வாள் எடுத்து வெட்ட பாக்குதே

உறவுகள் எனக்கது புரியல சில உணர்வுகள்
எனக்கது விளங்கல  
கலங்கரை விளக்கமே இருட்டிலே…

பெத்ததுக்கு தண்டனைய கொடுத்துட்டேன் 
மாமன் ரத்தத்துல துக்கத்த தெளிச்சிட்டேன்  
அன்புல  அரளிய வெதைச்சுட்டேன்

அட்ட கத்தி தான்னு நான் ஆடி பாத்தேன் விளையாட்டு 
வெட்டு கத்தியாக அது மாறி இப்போ வினையாச்சு

பட்டாம்பூச்சி மேலே ஒரு கொட்டாங்குச்சி மூடியதே
கண்ணாமூச்சி ஆட்டத்திலே கண்ண இப்போ காணலியே
வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு 

படைச்சவன் போட்ட முடிச்சிது 
என் கழுத்துல மாட்டி இறுக்குது 
பகையிலே  மனசு தான் பதறுது 

கனவுல பெய்யிற மழையிது 
நான் கை தொடும் போது மறையுது
மேகமே சோகமாய் உறையுது 
சூரத்தேங்காய் போல என்னை சுக்கு நூறா உடைக்காதே
சொக்கப் பனைமேல நீ தீய அள்ளி வீசாதே

எட்டி எட்டிப் போகையிலே ஈரக்குலை வேகிறதே 
கூட்டாஞ்சோறு ஆக்கையிலே தீ காத்து வீசியதே

வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு கொல்ல பாக்குதே
அது வாள் எடுத்து வாள் எடுத்து வெட்ட பாக்குதே

நான் திமிரா செஞ்ச காரியம் ஒன்னு தப்பா போனதே 
என் தாமிரபரணி தண்ணி இப்போ உப்பா போனதே

நீ எனக்கு சொந்தமில்லை என்ற சொன்ன 
உடன் மனசு வெந்து போச்சே 
என் நிழலில் கூட இப்போ ரத்தம் கொட்டுதடி
இதயம் சுருங்கி போச்சே…

Movie: Thaamirabharani
Lyrics: Na. Muthu Kumar
Music: Yuvan Shankar Raja

Leave a Reply