Lyricist Na. Muthukumar

தொட்டு தொட்டு என்னை பாடல் வரிகள்

தொட்டு தொட்டு என்னை  வெற்று கழி 
மண்ணை சிற்பமாக யார் செய்ததோ
சிற்பமாக யார் செய்ததோ

தொட்டு தொட்டு என்னை பட்டாம்பூச்சி பெண்ணை 
திட்டமிட்டு யார் வென்றதோ
திட்டமிட்டு யார் வென்றதோ

விழியில் விழுந்து வழியினை மறக்கிறேன்
உனக்குள் உம்… தொலைந்து 
உயிரோடு கலக்கிறேன்

தொட்டு தொட்டு என்னை வெற்று கழி
மண்ணை சிற்பமாக யார் செய்ததோ
சிற்பமாக யார் செய்ததோ

தொட்டு தொட்டு என்னை பட்டாம்பூச்சி பெண்ணை 
திட்டமிட்டு யார் வென்றதோ
திட்டமிட்டு யார் வென்றதோ

தாய் உடன் பேசும் வார்த்தைகள்
எல்லாம் உடனே மறக்கும் 
உன்னுடன் பேசும் வார்த்தைகள்
எல்லாம் உள்ளே நிலைக்கும்
ஹ்ம்ம்ம்ம்ம் ம்ம்

முதல் முறை உன்னை பார்த்தது எங்கே
மனதும் தேடும் மலை நின்ற பின்னும் 
மரகிளை இங்கே மெதுவாய் தூவும்

இதயத்தின் உள்ளே இமயத்தை போலே 
சுமைகளை வைத்தால் காதல்

உலகத்தில் உள்ள சித்ரவதைகெல்லாம் 
செல்ல பெயர் வைத்தால் காதல்

எங்கே நான் போனாலும் என் வாழ்வில்
என்றும் உன் நிழலில் இளைப்பாற
வருவேன் கண்ணே 

மரணம் தான் வந்தாலும் பூசெண்டு தந்து 
உன் மடியில் தலைசாய்த்து இறப்பேன்
பெண்ணே

கருவிழி ரெண்டும் கருவறை தானோ 
மீண்டும் பிறந்தேன் கங்கரூவை போல
நெஞ்சுக்குள்ளே நானும் உன்னை சுமந்தேன்
ஹ்ம்ம்ம்ம்ம் ம்ம்

உன்னை போல யாரும் என்னை தாண்டி
போனால் உன்னை நினைப்பேன்
உந்தன் ஆசை முகம் பார்த்து கிடக்கத்தான் 
உயிரை சுமப்பேன்

நெருங்கவும் இல்லை விலகவும் இல்லை 
நெஞ்சம் செய்யும் தொல்லை காதல்

தொடக்கமும் இல்லை முடிவுகள் இல்லை
கடவுளை போலே காதல்

தொட்டு தொட்டு உன்னை வெற்று கழி
மண்ணை சிற்பமாக யார் செய்ததோ
சிற்பமாக யார் செய்ததோ

தொட்டு தொட்டு உன்னை பட்டாம்பூச்சி பெண்ணை
திட்டமிட்டு யார் வென்றதோ
திட்டமிட்டு யார் வென்றதோ

விழியில் விழுந்து வழியினை மறக்கிறேன்
உனக்குள் ஆ ஆ தொலைந்து 
உயிரோடு கலக்கிறேன்

தொட்டு தொட்டு உன்னை வெற்று கழி
மண்ணை சிற்பமாக யார் செய்ததோ

தொட்டு தொட்டு உன்னை பட்டாம்பூச்சி பெண்ணை 
திட்டமிட்டு யார் வென்றதோ…

Movie: Kaadhal
Lyrics: Na. Muthu Kumar
Music: Joshua Sridhar

Leave a Reply