Lyricist Sam C.S.

கண் கேட்கும் கனா பாடல் வரிகள்

கண் கேட்கும் கனா நெஞ்சுக்குள் வினா
என் கூட நீ வந்தா இன்பம் என்பேனா
கண் கேட்கும் கனா நெஞ்சுக்குள் வினா
என் கூட நீ வந்தா இன்பம் என்பேனா

கண் கேட்கும் கனா நெஞ்சுக்குள் வினா ஹ்ம்ம
உன் நகம் வர சொல் முகவரி உன் உடல் வர ஏன் அனுமதி

தீராத நேரம் உன் கூட போதும்
மாயாத நாள் மட்டும் நாம் வாழ வேணும்
தீராத ஆசை ஓயாமல் தோணும்
நாள் நேரம் பாராமல் தோள் சாய வேணும்

ஓ சாயாலி ஓ சாயாலி என்னுள் நீ பூகம்பம் செய்தாயடி
ஓ சாயாலி ஓ சாயாலி என்னை நீ வேரோடு பேத்தாயடி

கண் கேட்கும் கனா நெஞ்சுக்குள் வினா
என் கூட நீ வந்தா இன்பம் என்பேனா
கண் கேட்கும் கனா நெஞ்சுக்குள் வினா
என் கூட நீ வந்தா இன்பம் என்பேனா

ஆழி போல் சூழ்ந்திடும் அன்பிலான வீடு இது
ஓர் உயிர் போலவே நாங்கள் வாழும் கூடு இது
ஆழி போல் சூழ்ந்திடும் அன்பிலான வீடு இது
ஓர் உயிர் போலவே நாங்கள் வாழும் கூடு இது

ஓ தூரத்து வானத்தில் மழை போல சந்தோசம்
என்றும் எங்கள் வீட்டுக்குள் கொட்டும்

பள்ளங்கள் இல்லாத பாசங்கள் கொண்டு இங்கு
காற்றும் இங்கே தாலாட்டு மீட்கும்

தேவைகள் வேற்றில்லை நாங்களும் வாழ்ந்திட
அன்பினில் வாழ்கிறோம் இன்பம் கூடிட..

நான் சாயாலி நான் சாயாலி என்னுள்ளே பூகம்பம் செய்தாயே நீ
நான் சாயாலி நான் சாயாலி என்னை நீ வேரோடு பேத்தாயே நீ

நீ இல்லா நாழிகை தீயில் வேகும் ஓர் நிலை
கூடவே நீ வர கூறு நீயும் யோசனை

தேன் நிலா ஆகிறேன் தூரம் நீயும் போகையில்
வா உலா போகலாம் கூடல் கூடும் வேலையில்

என் கண்ணின் சாரத்தில் உன் பிம்ப மீறல்கள்
ஏனோ என்னை தோற்பிக்க தானோ

கண்ணாடி நெஞ்சம் மேல் உன் அன்பின் பாரங்கள்
ஏனோ என் நெஞ்சை சில்லாக்க தானோ

ஏன் இனி தாமதம் வா உடன் வாழ்ந்திட
நாட்களும் தீரும்முன் சேர்வோம் வாழ்ந்திட

நான் சாயாலிநான் சாயாலி என்னுள்ளே பூகம்பம் செய்தாயே நீ
நான் சாயாலி நான் சாயாலி என்னை நீ வேரோடு பேத்தாயே நீ

ஆஅ ஆஅ ஆஅ  ஆஅ
கண் கேட்கும் கனா நெஞ்சுக்குள் வினா
என் கூட நீ வந்தா இன்பம் என்பேனா

கண் கேட்கும் கனா நெஞ்சுக்குள் வினா
என் கூட நீ வந்தா இன்பம் என்பேனா

சாயாலி சாயாலி ஓ சாயாலி ஓ சாயாலி சாயாலி
சாயாலி ஓ சாயாலி ஓ சாயாலி சாயாலி சாயாலி
ஓ சாயாலி ஓ சாயாலி வருவேனே என் சாயாலி…

Movie: Adanga Maru
Lyrics: Sam CS
Music: Sam CS

Leave a Reply