Lyricist Pa.Vijay

ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் பாடல் வரிகள்

ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் நெஞ்சிலே
ரோசா பூவைபோல

அடி கண்ணே கண்ணே உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே
கண்ணுமணியப்போல

நெல்லி கொத்தி வைக்கும் எங்க பத்தாயத்துல
ஆசை கொட்டி வெச்சேன் தினம் உன் நெனப்புல
நீயும் இல்லாம நானும் இல்லை

ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் நெஞ்சிலே
ரோசா பூவைபோல

அடி கண்ணே கண்ணே
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே
கண்ணுமணியப்போல

ராசாத்தி நீயும்தான் பூகோலம் போடத்தான்
புள்ளிமான் புள்ளியெல்லாம் வாங்கி வருவேன்

சாமிய சந்திச்சா என் ஆயுள் காலத்த 
உன்னோட சேர்க்கும் வரம் வாங்கி வருவேன்

தோளுலே ஊஞ்சல் கட்டி  
தோகமயிலே தாலாட்டுவேன் வீசும் காத்தை 
சல்லடையால சரிச்சு தூசி எடுப்பேன் 
உனக்கும் மூச்சு குடுப்பேன்

ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் நெஞ்சிலே
ரோசா பூவைபோல

அடி கண்ணே கண்ணே
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே
கண்ணுமணியப்போல

ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்

முள்ளைப்பூ காம்புதான் உன் கையை குத்தாதா 
ஊருக்குள் காம்பில்லாத பூவும் பூக்காதா
செம்மண்ணின் புழுதி உன் கண்ணில் விழுமே 
புழுதி காத்தில்லாம பூமி சுத்தாதா

மூக்குத்தி குத்தாதடி எனக்கு வலிக்கும் வேணாமடி
உனக்கு வலிச்சா 
மறுநொடி நானும் உசுர கையில் எடுப்பேன் 
உனக்கு நானும் குடுப்பேன்

ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் நெஞ்சிலே
ரோசா பூவைபோல அடி கண்ணே கண்ணே
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே
கண்ணுமணியப்போல..

நெல்லி கொத்தி வைக்கும் எங்க பத்தாயத்துல
ஆசை கொட்டி வெச்சேன் தினம் உன் நெனப்புல
நீயும் இல்லாம நானும் இல்லை

ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் நெஞ்சிலே
ரோசா பூவைபோல அடி கண்ணே கண்ணே
உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே
கண்ணுமணியப்போல…

Movie: Maanasthan
Lyrics: Pa.Vijay
Music: S. A. Rajkumar

Leave a Reply