பூ மாலை வாங்கி வந்தான் பாடல் வரிகள்
ஆஹா ஆஆ ஆஆ ஆஹா ஆஆ ஆஆ ஆஆ
பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே
தினம் தினம் பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே
செவி இல்லை இங்கொரு இசை எதற்கு
விழி இல்லை இங்கொரு விளக்கெதற்கு
நாளும் நாளும் அவள் நினைவில் இவன் அழுது
பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே
கையில் கிண்ணம் பிடித்து விட்டான்
இனிக்கின்ற விஷத்திற்குள் விழுந்து விட்டான்
ராகம் தாளம் மறந்துவிட்டான்
ரசிகரின் கடிதத்தை கிழித்துவிட்டான்
கடற் கரை எங்கும் மணல்வெளியில் காதலி காலடி தேடினான்
மோகனம் பாடும் வேளையிலும் சிந்துவில் ராகம் பாடினான்
விதி என்னும் ஊஞ்சலில் ஆடினான்
போதையினால் புகழ் இழந்தான்
மேடையில் அணிந்தது வீதியில் விழுந்திட
பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே
நேற்று சபதங்கள் எடுத்துவிட்டான்
குடிக்கின்ற கோப்பையை உடைத்து விட்டான்
மீண்டும் அவள் முகம் நினைத்துவிட்டான்
சபதத்தை அவன் இன்று உடைத்துவிட்டான்
இசைக்கொரு குயில் என்று ….. ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
இசைக்கொரு குயிலென்று பெயரெடுத்தான்
இருமலை தான் என்று சுரம் பிடித்தான்
மனிதர்கள் இருப்பதை மறந்துவிட்டான்
மானத்தின் மானத்தை வாங்கிவிட்டான்
போதையின் பாதையில் போகின்றான்
தன்முகமே தான் மறந்தான்
சூடவும் தோளில்லை ஆளில்லை இவன் அன்று
பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே
செவி இல்லை இங்கொரு இசை எதற்கு
விழி இல்லை இங்கொரு விளக்கெதற்கு
நாளும் நாளும் அவள் நினைவில் இவன் அழுது
பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே
பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே யே யே…
Movie: Sindhu Bhairavi
Lyrics: Vairamuthu
Music: Ilaiyaraaja