Lyricist Vairamuthu

பூ மாலை வாங்கி வந்தான் பாடல் வரிகள்

ஆஹா ஆஆ ஆஆ ஆஹா ஆஆ ஆஆ ஆஆ

பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே
தினம் தினம் பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே

செவி இல்லை இங்கொரு இசை எதற்கு 
விழி இல்லை இங்கொரு விளக்கெதற்கு 
நாளும் நாளும் அவள் நினைவில் இவன் அழுது
பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே

கையில் கிண்ணம் பிடித்து விட்டான் 
இனிக்கின்ற விஷத்திற்குள் விழுந்து விட்டான்
ராகம் தாளம் மறந்துவிட்டான் 
ரசிகரின் கடிதத்தை கிழித்துவிட்டான்

கடற் கரை எங்கும் மணல்வெளியில் காதலி காலடி தேடினான் 
மோகனம் பாடும் வேளையிலும் சிந்துவில் ராகம் பாடினான் 

விதி என்னும் ஊஞ்சலில் ஆடினான்
போதையினால் புகழ் இழந்தான்
மேடையில் அணிந்தது வீதியில் விழுந்திட

பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே

நேற்று சபதங்கள் எடுத்துவிட்டான் 
குடிக்கின்ற கோப்பையை உடைத்து விட்டான்
மீண்டும் அவள் முகம் நினைத்துவிட்டான் 
சபதத்தை அவன் இன்று உடைத்துவிட்டான்

இசைக்கொரு குயில் என்று ….. ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ 
இசைக்கொரு குயிலென்று பெயரெடுத்தான்
இருமலை தான் என்று சுரம் பிடித்தான் 
மனிதர்கள் இருப்பதை மறந்துவிட்டான் 

மானத்தின் மானத்தை வாங்கிவிட்டான்
போதையின் பாதையில் போகின்றான் 
தன்முகமே தான் மறந்தான் 
சூடவும் தோளில்லை ஆளில்லை இவன் அன்று

பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே
செவி இல்லை இங்கொரு இசை எதற்கு 
விழி இல்லை இங்கொரு விளக்கெதற்கு

நாளும் நாளும் அவள் நினைவில் இவன் அழுது
பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே 
பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே யே யே…

Movie: Sindhu Bhairavi
Lyrics: Vairamuthu
Music: Ilaiyaraaja

Leave a Reply