Lyricist Vairamuthu

மலரே மௌனமா பாடல் வரிகள்

மலரே மௌனமா மௌனமே வேதமா
மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே
மலரே மௌனமா மௌனமே வேதமா

பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ 
மீதி ஜீவன் என்னைப் பார்த்த போது வந்ததோ
ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே

ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே
விரல்கள் தொடவா விருந்தைப் பெறவா
மார்போடு கண்கள் மூடவா

மலரே மௌனமா மலர்கள் பேசுமா

கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்…
காற்றைப் போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்..
காற்றே என்னை கிள்ளாதிரு பூவே என்னை தள்ளாதிரு

காற்றே என்னை கிள்ளாதிரு பூவே என்னை தள்ளாதிரு
உறவே உறவே உயிரின் உயிரே புது வாழ்க்கை தந்த வள்ளலே
மலரே மௌனமா மௌனமே வேதமா
மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே

மலரே ம்.. மௌனமா? ம்ம்..  மௌனமே ம்ம்ம்.. வேதமா ஆ…அ…

Movie: Karnaa
Lyrics: Vairamuthu
Music: Vidyasagar

Leave a Reply