Kannaana Kanney Song Lyricis in Tamil
கண்ணான கண்ணே கண்ணான கண்ணே
என் மீது சாய வா
புண்ணான நெஞ்சை பொன்னான கையால்
பூ போல நீவ வா
நான் காத்து நின்றேன் காலங்கள் தோறும் என் ஏக்கம் தீருமா
நான் பார்த்து நின்றேன் பொன் வானம் எங்கும் என் மின்னல் தோன்றுமா
தண்ணீராய் மேகம் தூறும் கண்ணீர் சேரும் கற்கண்டாய் மாறுமா
ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ
ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ
கண்ணான கண்ணே கண்ணான கண்ணே
என் மீது சாய வா
புண்ணான நெஞ்சை பொன்னான கையால்
பூ போல நீவ வா
ஆஆ…ஆஅ…ஆஅ…ஆஅ….
ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ..
அலை கடலின் நடுவே அலைந்திடவா தனியே
படகெனவே உனையே பார்த்தேன் கண்ணே….
புதை மணலில் வீழ்ந்து புதைந்திடவே இருந்தேன்
குறு நகை எரிந்தே மீட்டாய் என்னை
விண்ணோடும் மண்ணோடும் வாடும் பெரும் ஊஞ்சல் மனதோரம்
கண்பட்டு நூல் விட்டு போகும் என ஏதோ பயம் கூடும்
மயில் ஒன்றை பார்க்கிறேன் மழையாகி ஆடினேன்
இந்த உற்சாகம் போதும் சாக தோன்றும் இதே வினாடி
கண்ணான கண்ணே கண்ணான கண்ணே
என் மீது சாய வா
புண்ணான நெஞ்சை பொன்னான கையால்
பூ போல நீவ வா
நீ தூங்கும் போது உன் நெற்றி மீது முத்தங்கள் வைக்கணும்
போர்வைகள் போர்த்தி போகாமல் தாழ்த்தி நான் காவல் காக்கணும்
எல்லோரும் தூங்கும் நேரம் நானும் நீயும் மௌனத்தில் பேசணும்
ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ
ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ
கண்ணான கண்ணே கண்ணான கண்ணே...
Movie: Viswasam
Lyrics: Thamarai
Music: D. Imman
0 Comments