Lyricist Vaali

இந்த மாமனோட பாடல் வரிகள்

இந்த மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால்
எண்ணியது போலே பூச்சூடுது

குத்தால குளுமையும் கூடி வருது
சந்தோஷ நெனப்பொரு கோடி வருது
சொல்ல வார்த்தை ஏதும் இல்லை

மாமனோட ஹே மாமனோட மனசு
மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால்
எண்ணியது போலே பூச்சூடுது

அக்காளின் மகளுக்கு கேட்டதை நான் கொடுப்பேன்
மனசில் இப்ப அல்லாடி கிடக்கிற ஆசைய நான் முடிப்பேன்

விரும்பியது இந்நேரம் கிடைகிற போது
வரும் ஏக்கம் நெஞ்சில் ஏது

எல்லோர்க்கும் நினைத்தது போலே 
மண வாழ்க்கை வாய்த்திடாது

எப்போதும் ஒருவனை எண்ணி தவித்தேன்
இப்போது நான் அதை கண்டு பிடித்தேன்
கெட்டி மேளம் கேட்கும் நேரம் கூட மாமனோட

இந்த மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால்
எண்ணியது போலே பூச்சூடுது

குத்தால குளுமையும் கூடி வருது
சந்தோஷ நெனப்பொரு கோடி வருது
சொல்ல வார்த்தை ஏதும் இல்லை

மாமனோட இந்த மாமனோட மனசு 
மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால்
எண்ணியது போலே பூச்சூடுது

பொன்னான நகைகளும் மாலையும் போட்டிருப்பேன்
மணவறையில் கண்ணாலே உனக்கொரு
நன்றியை நானுரைபேன்

எனக்கு அன்று சொல்லாத உணர்வுகள் கூடும்
விழி ஓரம் ஈரமாகும்

கல்யாண கனவுகள் யாவும் கையில் சேரும் நேரம் ஆகும்
பல்லாண்டு படித்திடும் ஊர் முழுதும்
வண்டாட்டம் பறந்திடும் வஞ்சி மனதும்
மஞ்சத் தாலி மார்பில் ஊஞ்சலாட மாமனோட

ஹே மாமனோட மனசு
மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால்
எண்ணியது போலே பூச்சூடுது

குத்தால குளுமையும் கூடி வருது
சந்தோஷ நெனப்பொரு கோடி வருது
சொல்ல வார்த்தை ஏதும் இல்லை மாமனோட

இந்த மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால்
எண்ணியது போலே பூச்சூடுது…

Movie:  Uthama Raasa
Lyrics: Vaali
Music: Ilaiyaraaja

Leave a Reply