Guruvayurappa Guruvayurappa Song Lyrics in Tamil
குருவாயூரப்பா குருவாயூரப்பா குருவாயூரப்பா
குருவாயூரப்பா நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி
குருவாயூரப்பா குருவாயூரப்பா
வேண்டா தெய்வம் இல்லை நீதானே பாக்கி
ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன
நான் போகும் பாதை என்னாளும் உன் பாதை
ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன
நான் போகும் பாதை என்னாளும் உன் பாதை
குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி
தேனாற்றங்கரையில் தெய்வீகக்குரலில்
நான்தான் ஒரு பாட்டிசைத்தேன்
தினம் தோறும் இரவில் நடு ஜாமம்
வரையில் நான்தானே அதைக் கேட்டிருந்தேன்
அரங்கேற்றம் தான் ஆகாமல்தான்
அலைபாயும் என் ஜீவன் தான்
வா வா என் தேவா செம்பூவா என்
தேகம் சேராதோ உன் கைகளிலே
குருவாயூரப்பா குருவாயூரப்பா நான்
கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி
ஏகாந்த நினைவும் எரிகின்ற நிலவும்
என் மேல் ஒரு போர் தொடுக்க
எனை வந்து தழுவு ஏனிந்தப் பிரிவு
மானே வா உனை யார் தடுக்க
பரிமாறலாம் பசியாறலாம் பூமால நீ சூடும் நாள்
மாது உன மீது இப்போது என் மோகம் பாயாதோ
சொல் பூங்குயிலே
குருவாயூரப்ப குருவாயூரப்பா
நான கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி
குருவாயூரப்பா குருவாயூரப்பா வேண்டாத
தெய்வம் இல்லை நீதானே பாக்கி
ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன
நான் போகும் பாதை என்னாளும் உன் பாதை
குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி...
Movie: Pudhu Pudhu Arthangal
Lyrics: Vaali
Music: Ilaiyaraaja
0 Comments