Lyricist Snehan

அரளி விதையில் முளைச்ச பாடல் வரிகள்

அரளி விதையில் முளைச்ச துளசி செடியா காதல்
துளசி செடியா காதல்

அரளி விதையில் முளைச்ச துளசி செடியா காதல்
துளசி செடியா காதல் ஓ ஹா

உறவை மனது வளர்க்குதே ஓ ஹா
உயிரை அறுத்து எடுக்குதே ஓ ஹா
கண்ணில் காதல் விதைக்குதே ஓ ஹா
கடைசியில் உசுரை கொல்லுதே ஓ ஹா

அரளி விதையில் முளைச்ச துளசி செடியா காதல்
துளசி செடியா காதல்

உள்ளத்தில் காதலை சுமந்துக் கொண்டு
உதட்டில் மறைச்சால் மறையாதே
உறவின் நிழலில் நின்றுக் கொண்டு
வெயிலில் காதலை வீசாதே

மனதில் ஆசையை புதைத்து விட்டு
மறைஞ்சு மறைஞ்சு வாழாதே
என்னை மறக்க நினைத்து விட்டு
உன்னை நீயே இழக்காதே

யாரோட சதி நீ வச்ச பொறி
நெஞ்சுக்குள் வலி வலி வலி வலி வலி
வலி வலி வலி வலியே

அரளி விதையில் முளைச்ச துளசி செடியா காதல்
துளசி செடியா காதல் ஓ ஹா

உறவை மனது வளர்க்குதே ஓ ஹா
உயிரை அறுத்து எடுக்குதே ஓ ஹா
கண்ணில் காதல் விதைக்குதே ஓ ஹா

கடைசியில் உசுரை கொல்லுதே
கடைசியில் உசுரை கொல்லுதே
கடைசியில் உசுரை கொல்லுதே…

Movie: Kovil
Lyrics: Snehan
Music: Harris Jayaraj

Leave a Reply