Paruruvaaya Song Lyrics in Tamil
பாருரு வாய பிறப்பறவேண்டும்
பத்திமை யும்பெற வேண்டும்
பாருரு வாய பிறப்பறவேண்டும்
பத்திமை யும்பெற வேண்டும்
சீருரு வாய சிவபெரு மானே
செங் கமல மலர்போல்
ஆருரு வாயஎன் னார முதேஉன்
அடியவர் தொகை நடுவே
ஓருருவாய நின் திருவருள் காட்டி
என்னையும் உய்யக்கொண் டருளே...
என்னையும் உய்யக்கொண் டருளே...
பாருரு வாய பிறப்பறவேண்டும்
பத்திமை யும்பெற வேண்டும்
பத்தில னேனும் பணிந்தில னேனும்உன்
உயர்ந்தபைங் கழல் காணப்
பத்தில னேனும் பணிந்தில னேனும்உன்
உயர்ந்தபைங் கழல் காணப்
பித்தில னேனும் பிதற்றில னேனும்
பிறப்பறுப்பாய் எம்பெருமானே
முத்தனை யானே மணியனை யானே
முதல்வ னேமுறை யோஎன்று
எத்தனை யானும் யான்தொடர்ந் துன்னை
இனிப்பிரிந் தாற்றேனே.
பாருரு வாய பிறப்பறவேண்டும்
பத்திமை யும்பெற வேண்டும்
சீருரு வாய சிவபெரு மானே
செங் கமல மலர்போல்
ஆருரு வாயஎன் னார முதேஉன்
அடியவர் தொகை நடுவே
ஓருருவாய நின் திருவருள் காட்டி
என்னையும் உய்யக்கொண் டருளே...
என்னையும் உய்யக்கொண் டருளே...
Movie: Tharai Thappattai
Lyrics: Maanikkavaasagar
Music: Ilaiyaraaja
0 Comments