Lyricist Piraisoodan

நூறு வருஷம் பாடல் வரிகள்

நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்
பேரு விளங்க இங்கு வாழனும்
சோல வனத்தில் ஒரு சோடிக்குயில் போலத்தான்
காலம் முழுக்க சிந்து பாடனும்

ஒண்ணுக்கொண்ணு பக்கத்திலே பொண்ணு புள்ள நிக்கையிலே
கண்ணுபடும் மொத்தத்திலே கட்டழக அம்மாடி என்ன சொல்ல
நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்
பேரு விளங்க இங்கு வாழனும்

சோல வனத்தில் ஒரு சோடிக்குயில் போலத்தான்
காலம் முழுக்க சிந்து பாடணும்

உசில மணியாட்டம் ஒடம்பத்தான் பாரு
தெருவில் அசைஞ்சாடும் திருவாரூர் தேரு
ஓம குச்சி போல் புடிச்சாரு தாரம்
தாவி அணச்சக்க தாங்காது பாரம்

இவரு ஏழு அடி நடக்கும் ஏணி எடி
நிலவ நின்னுக்கிட்டே தொட்டுடுவார் பாரு
மனைவி குள்ளமணி உயரம் மூணு அடி
இரண்டும் இணைஞ்ஜிருந்த கேலிபன்னும் ஊரு

ரெட்டை மாட்டு வண்டி வரும்போது நெட்ட குட்ட என்றும் இணையாது
இந்தஒட்டகந்தான் கட்டிக்கிட குட்டவாத்த புடிச்சான்

நூறு வருஷம் ஹே ஹே ஹேய் நூறு வருஷம்
இந்த மாபிள்ளையும் பொண்ணும்தான்
பேரு விளங்க இங்கு வாழனும்

ஹே ஒண்ணுக்கொண்ணு பக்கத்திலே பொண்ணு புள்ள நிக்கையிலே
கண்ணுபடும் மொத்தத்திலே கட்டழக அம்மாடி என்ன சொல்ல

நூறு வருஷம் இந்த மாபிள்ளையும் பொண்ணும்தான்
பேரு விளங்க இங்கு வாழனும் ஹேய்

புருஷன் பொஞ்சாதி பொருத்தம் தான் வேணும்
பொருத்தம் இல்லாட்டி வருத்தம் தான் தோணும்
அமைஞ்சா அது போல கல்யாணம் பண்ணு
இல்ல நீ வாழு தனி ஆழா நின்னு

மொதலில் யோசிக்கனும் பிறகு நேசிக்கணும்
மனுசு ஏத்துகிட்டா சேந்துகிட்டு வாழு
ஒனக்கு தகுந்தபடி குணத்தில் சிறந்தபடி
இருந்தா ஊர் அறிய மாலை கட்டி போடு

சொத்து வீடு வாசல் இருந்தாலும்
ஹேய் சொந்தம் பந்தம் எல்லாம் அமைஞ்சாலும்
அட உள்ளம் ரெண்டும் ஒட்டாவிட்டா கல்யாணம் தான் கசக்கும்

நூறு வருஷம் ஹேய் ஹேய் ஹேய்
நூறு வருஷம் இந்த மாபிள்ளையும் பொண்ணும்தான்
பேரு வெளங்க இங்கு வாழனும்
சோல வனத்தில் ஒரு சோடிக்குயில் போலத்தான்
காலம் முழுக்க சிந்து பாடனும்

ஒண்ணுக்கொண்ணு பக்கத்திலே பொண்ணு புள்ள நிக்கையிலே
கண்ணுபடும் மொத்தத்திலே
கட்டழக அம்மாடி என்ன சொல்ல

நூறு வருஷம் இந்த மாபிள்ளையும் பொண்ணும்தான்
பேரு விளங்க இங்கு வாழனும்
சோல வனத்தில் ஒரு சோடிக்குயில் போலத்தான்
காலம் முழுக்க சிந்து பாடனும்…

Movie: Panakkaran
Lyrics: Piraisoodan
Music: Ilaiyaraaja