யமுனை ஆற்றிலே பாடல் வரிகள்
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
கண்ணனோடுதான் ஆட..
பார்வை பூத்திட பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட..
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
கண்ணனோடுதான் ஆட..
பார்வை பூத்திட பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட..
இரவும் போனது பகலும் போனது
மன்னன் இல்லையே கூட..
இளைய கன்னியின் இமைத்திடாத கண்
இங்கும் அங்குமே தேட..
இரவும் போனது பகலும் போனது
மன்னன் இல்லையே கூட..
இளைய கன்னியின் இமைத்திடாத கண்
இங்கும் அங்குமே தேட..
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ..
ஆசை வைப்பதே அன்புத் தொல்லையோ..
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ..
ஆசை வைப்பதே அன்புத் தொல்லையோ.. பாவம் ராதா ..
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
கண்ணனோடுதான் ஆட..
பார்வை பூத்திட பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட…
Movie: Thalapathi
Lyrics: Vaali
Music: Ilaiyaraaja