கண்மணி அன்போடு காதலன் பாடல் வரிகள்
கண்மணி அன்போட காதலன் நான் நான்.. எழுதும் லெட்டர் .
ச்சீ.. மடல் .. இல்ல கடுதாசி வெச்சுக்கலாமா
இல்ல கடிதமே இருக்கட்டும் .. எங்க படி …
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே..
பாட்டாவே படுச்சிட்டியா அப்ப நானும் ..
மொதல்ல கண்மணி சொன்னேன்ல .. இங்க பொன்மணி போட்டுக்க ..
பொன்மணி உன் வீட்ல சௌக்கியமா
நா இங்க சௌக்கியம் ..
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்யமே ..
உன்ன நெனச்சு பாக்கும்போது கவித
மனசுல அருவி மாதிரி கொட்டுது
ஆனா அத எழுதணும்னுட்டு ஒக்காந்தா
அந்த எழுத்துதான் வார்த்தை ..
உன்னை எண்ணி பார்க்கையில் கவிதை கொட்டுது .. அதான் ..
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது .. அதேதான் ..
ஆஹ்ஹா .. பிரமாதம் .. கவித கவித ..
படி .. கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே ..
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்யமே ..
உன்னை எண்ணி பார்க்கையில் கவிதை கொட்டுது ..
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது ..
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே ..
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்யமே ..
எனக்கு உண்டான காயம் அது தன்னால ஆறிடும்
அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல .
எனக்கு ஒண்ணுமே ஆவரது இல்ல . இதையும் எழுதிக்கோ ..
நடுவுல நடுவுல மானே தேனே பொன்மானே இதெல்லாம் போட்டுக்கணும் ..
தோ பாரு எனக்கு என்ன காயம்னாலும் ஒடம்பு தாங்கிடும்
உன் உடம்பு தாங்குமா தாங்காது ..
அபிராமி அபிராமி .. அதையும் எழுதணுமா
ஹ்ம்ம் ஹ்ம்ம் .. அது .. காதல் ..
என் காதல் என்னனு சொல்லாம ஏங்க ஏங்க அழுகையா வருது
ஆனா நா அழுது என் சோகம் உன்ன தாக்கிடுமோ
அப்படினு நினைக்கும்போது வர அழுக கூட நின்னுடுது ..
மனிதர் உணர்ந்துகொள்ள இது மனித காதல் அல்ல ..
காதல் அல்ல .. காதல் அல்ல …
காதல் அல்ல … காதல் அல்ல ….
அதையும்தாண்டி புனிதமானது ..
புனிதமானது .. புனிதமானது …
புனிதமானது …. புனிதமானது …..
உண்டான காயமெங்கும் தன்னாலே ஆறிப்போன
மாயம் என்ன பொன்மானே பொன்மானே ..
என்ன காயம் ஆன போதும் என் மேனி தாங்கிகொள்ளும்
உந்தன் மேனி தாங்காது செந்தேனே
எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க
அழுகை வந்தது ..
எந்தன் சோகம் உன்னை தாக்கும் என்றெண்ணும்போது வந்த
அழுகை நின்றது ..
மனிதர் உணர்ந்து கொள்ள , இது மனித காதல் அல்ல ..
அதையும் தாண்டி புனிதமானது ..
அபிராமியே தாலாட்டும் சாமியே நான்தானே தெரியுமா
சிவகாமியே சிவனில் நீயும் பாதியே அதுவும் உனக்கு புரியுமா
சுப லாலி லாலியே லாலி லாலியே லாலி லாலியே..
அபிராமியே தாலாட்டும் சாமியே நான்தானே தெரியுமா…
உனக்கு புரியுமா…
Movie: Gunaa
Lyrics: Vaali
Music: Ilaiyaraaja