ஆட்டுவித்தால் யார் ஒருவர் பாடல் வரிகள்
ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா..
ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா..
ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா..
நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு..
நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு..
என் நிழலில் கூட அனுபவத்தில் சோகம் உண்டு..
பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே..
ஆனால் நண்பரிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே..
நண்பரிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே..
ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா..
ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா..
பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்
அந்த பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்..
நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்
இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும், உள்ளம் கேட்பேன்..
நன்மை செய்து துன்பம் வாங்கும், உள்ளம் கேட்பேன்..
ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா..
ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா..
கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்..
அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்..
உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா..
இதை உணர்ந்து கொண்டால், துன்பம் எல்லாம் விலகும் கண்ணா..
உணர்ந்து கொண்டால், துன்பம் எல்லாம்விலகும் கண்ணா..
ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா..
ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா…