Lyricist Yugabharathi

கண்ண காட்டு போதும் பாடல் வரிகள்

கண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன் 
என்ன வேணும் கேளு குறையாம நானும் தாரேன்

நச்சுனு காதல கொட்டுற ஆம்பள ஒட்டுறியே உசுர நீ நீ
நிச்சயமாகல சம்மந்தம் போடல அப்பவுமே உறவு நீ நீ
அன்புல வித விதைச்சு என்ன நீ பரிட்சாயே…

கண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன் 
என்ன வேணும் கேளு குறையாம நானும் தாரேன்

நச்சுனு காதல கொட்டுற ஆம்பள ஒட்டுறியே உசுர நீ நீ
நிச்சயமாகல சம்மந்தம் போடல அப்பவுமே உறவு நீ நீ
அன்புல வித விதைச்சு என்ன நீ பரிட்சாயே…

நெஞ்சுல பூமழைய சிந்துர உன் நெனப்பு என்ன தூக்குதே..
எப்பவும் யோசனைய முட்டுற உன் சிரிப்பு குத்தி சாய்க்குதே

வக்கணையா நீயும் பேச நா வாயடைச்சு போகுறேன்.. 
வெட்டவெளி பாத நானும் உன் வீட்ட வந்து சேருறேன்

சிறு சொல்லுல உறியடிச்சு என்ன நீ சாய்ச்ச 
சக்கர வெயில் அடிச்சு சட்டுனு ஓச்ச 
றெக்கையும் மொளைச்சுடுச்சு கேட்டுக்க கிளி பேச்ச…

கண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன் ஓஹோ. 
என்ன வேணும் கேளு குறையாம நானும் தாரேன்

ஓ. தொட்டதும் கைகளுள ஒட்டுற உன் கருப்பு என்ன மாத்துதே
ஒட்டடை போல என்ன தட்டிடும் உன் அழகு வித்தை காட்டுதே..

தொல்லைகள கூட்டினாலும் நீ தூரம் நின்னா தாங்கல. 
கட்டிலிடும் ஆசையால என் கண்ணு ரெண்டும் தூங்கல

உன்ன கண்டதும் மனசுக்குள்ள எத்தனை கூத்து சொல்லவும் முடியவில்லை 
சூட்டையும் ஆத்து உன்ன என் உசுருக்குள்ள வெக்கணும் அட காத்து..

கண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன் 
என்ன வேணும் கேளு குறையாம நானும் தாரேன்…

Movie: Rekka
Lyrics: Yugabharathi
Music: D. Imman

Leave a Reply